ஒன்ராறியோ மக்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி எப்போது? முழுமையான தகவல்
ஒன்ராறியோவில் எதிர்பார்த்ததை விட விரைவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெறுவதற்கான முன்பதிவு செய்ய குடியிருப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
ஒன்ராறியோவில் இந்த கோடை காலம் முடிவுக்கு வருவதற்கு முன்னர் அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தை நோக்கி நகர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மே 31 தொடங்கி 80 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் தங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக பதிவு செய்யலாம். மார்ச் 21ம் திகதிக்கு பின்னர் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 12 வார இடைவெளிக்கு பிறகு தங்களின் 2வது டோஸ் பெற்றுக்கொள்ளலாம்.
ஜூன 14ம் திகதி முதல் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம். ஜூன் 28 முதல், மார்ச் 8 மற்றும் ஏப்ரல் 18 வரையான நாட்களில் முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் தங்கள் இரண்டாவது டோஸ் பெற பதிவு செய்யலாம்.
ஜூலை 19 முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களும், ஏப்ரல் 19 முதல் மே 9 வரையான நாட்களில் முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்களும் இரண்டாவது டோஸ் பெற பதிவு செய்யலாம்.
ஆகஸ்டு 2 முதல், மே 10ல் இருந்து மே 30 வரையான நாட்களில் முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் தங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற பதிவு செய்யலாம்.
ஆகஸ்டு மாதம் 9-16ம் திகதி வரை 12 முதல் 25 வயதுடையவர்கள் தங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், மே 31ம் திகதி முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் ஆகஸ்டு 9ம் திகதி தொடங்கி தங்கள் இரண்டாவது டோஸ் பெற பதிவு செய்யலாம்.