பூஸ்டர் டோஸை போட்டுக்கொண்ட ஐ.நா செய்தி தொடர்பாளருக்கு நேர்ந்த நிலை!
பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட ஐ.நா. செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸுன் (António Guterres) செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் (Stephane Dujarric) ஆவார். இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
“எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் ஐ.நா.மருத்துவ பணிகள் அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளேன். நான் மருத்துவ வழிகாட்டுதல்கள்படி தனிமைப்படுத்திக் கொள்கிறேன்.
மேலும், நான் ஏற்கனவே கொரோன தடுப்பூசியிம் 2 டோஸைகளை போட்டுக்கொண்டுள்ளேன். இதேவேளை, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளேன். லேசான அறிகுறிகள் உள்ளன. வீட்டில் இருந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளேன்” என்று அதில் ஸ்டீபன் துஜாரிக் குறிப்பிட்டுள்ளார்.