எல்லை தொழிலாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்; நியூசிலாந்து பிரதமர்
நாட்டின் எல்லைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசியை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டுமென நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் வலியுறுத்தியுள்ளார்.
வெல்லிங்டனில் (WELLINGTON)செய்தியாளர்களிடம் பேசிய நியூசிலாந்து பிரதமர்,
கடந்த 7 நாட்களில் நாட்டின் எல்லைகளில் பணிபுரியும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்தநிலையில் எல்லைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த மாத இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் இல்லையெனில் பணியிடத்திலிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை இதுவரை நியூசிலாந்தில் 90 ஆயிரம் பேருக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.