பதவி விலக அடம் பிடிக்கும் போரிஸ் ஜான்சன்; மற்றுமொரு முக்கியஸ்தர் இராஜினாமா!
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் (boris johnson) பதவியில் இருந்து விலக மறுத்ததைத் தொடர்ந்து வடக்கு அயர்லாந்து செயலாளர் பதவியில் இருந்து பிராண்டன் லூயிஸ் (Brandon Lewis) இராஜினாமா செய்துள்ளார்.
இன்று காலை அரசாங்கத்தின் சம்பளப் பட்டியலில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 50ஐ எட்டியது. எனினும், ஜான்சன் (boris johnson) இராஜினாமா செய்ய விரும்பவில்லை என்றும், போராட விரும்புகிறார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தனது இராஜினாமா தொடர்பில் இன்று காலை ட்வீட் செய்த லூயிஸ் (Brandon Lewis) , ஒரு கண்ணியமான மற்றும் பொறுப்பான அரசாங்கம் நேர்மை, ஒருமைப்பாடு மற்றும் பரஸ்பர மரியாதையை நம்பியுள்ளது.
அந்த விழுமியங்கள் நிலைநிறுத்தப்படுவதில்லை என்று நான் நம்புவதால் நான் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பது ஆழ்ந்த வருத்தம். எனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் அளித்துள்ளதாக கூறினார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் வடக்கு அயர்லாந்தின் செயலாளராக இருந்த லூயிஸ் ((Brandon Lewis)) , கன்சர்வேடிவ் கட்சியின் பெரும் கருத்தைக் கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும் என ஜான்சனிடம் (boris johnson) கூறிய அமைச்சரவை அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.