நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்த நாடுகளுக்கு பிரதமர் போரிஸ் பயணம்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) ஸ்வீடனுக்கு சென்றுள்ள நிலையில் அவர் அங்கிருந்து பின்லாந்துக்கு செல்லவுள்ளார். இதன்போது ஜான்சன் இரு நாடுகளின் தலைவர்களையும் சந்திப்பார் என கூறப்படுகின்றது.
ஸ்விடன் மற்றும் பின்லாந்து நாடுகள் நேட்டோவில் சேரலாமா என்று கருதுகின்றனர், இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு ஐரோப்பாவின் பதிலைப் பற்றியும் விவாதிக்க உள்ளார்.
அதேசமயம் உக்ரைன் படையெடுப்புக்குப் பிறகு, நேட்டோ கூட்டணியில் சேர்வதற்கான ஆதரவு ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகளிலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஜான்சன் (Boris Johnson) இங்கிலாந்துக்கு திரும்புவதற்கு முன், ஒவ்வொரு நாட்டிலும் ஒரு செய்தி மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதேவேளை முன்னதாக, நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் (Jens Stoltenberg), கூட்டணி ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடனை திறந்த கரங்களுடன் வரவேற்கும் என்றும் அவர்களின் உறுப்பினர்களை செயலாக்குவதில் குறைந்த தாமதம் ஏற்படும் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.