சாலையில் நடந்து சென்ற 10வயது சிறுவனை கடித்து குதறிய நாய்! பிரித்தானியாவில் ஏற்பட்ட பரிதாப சம்பவம்
பிரித்தானியாவில் சாலையில் நடந்து சென்ற 10வயது சிறுவனை நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பம் சுமார் 2 வாரங்களுக்கு முன்பு பிட் புல் வகை நாயை ஆன்லைன் மூலம் வாங்கி வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நாயின் உரிமையாளர் சாலையில் வாக்கிங் அழைத்து சென்றுள்ள சமயம் சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுவன் மீது திடீரென பாய்ந்துள்ளது.
சிறுவனின் தொண்டை பகுதியை கவ்விய நாய் கடித்து குதறியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாய் உரிமையாளரால் அந்த நாயை கட்டுப்படுத்த முடியவில்லை.
சம்பவமறிந்த பொலிசார் நாயை பிடிக்க முயன்ற போது அது பொலிசாரை தாக்க ஆரம்பித்ததால் வேறு வழியின்றி மற்ற காவலர்கள் நாயை சுட்டு கொலை செய்துள்ளனார்.
இந்த கொலை நடக்க காரணமாக இருந்த உரிமையாளரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறித்த சம்பவம் பிரித்தானியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.