பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் உடல்: விலகாத மர்மம்
ரொறன்ரோவில் பள்ளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் சடலம் தொடர்பில் மர்மம் நீடிப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் ஒரு பள்ளத்தில் காணப்பட்ட உடல் குறித்து தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக யார்க் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் உடற்கூராய்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த வழக்கை கொலை வழக்கு விசாரிக்கும் பிரிவு அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கும் என யார்க் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் மரணமடைந்த காரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் கட்டாயம் பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிறுவன் என மட்டுமே குறிப்பிட்டுள்ள பொலிசார், வயது உட்பட எந்த தகவலையும் வெளியிடவில்லை.