430 அடி ராட்சத ராட்டினத்தில் இருந்து விழுந்த சிறுவன்!
அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் 430 அடி உயரமுள்ள ராட்சத ராட்டினத்தில் இருந்து விழுந்து சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மிசோரி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சாம்ப்சன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் தனது நண்பர்கள் குடும்பத்துடன் குறித்த பகுதிக்குச் சென்ற நிலையில், 430 அடி உயரமுள்ள ராட்சத ராட்டினத்தில் சவாரி செய்தான். இதன்போது எதிர்பாராத விதமாக ராட்டினத்தில் இருந்து திடீரென்று கீழே விழுந்தான்.
இதனையடுத்து படுகாயம் அடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் பொழுதுபோக்கு பூங்கா இயக்குனர் ஜான் ஸ்டைன் கூறும்போது,
ராட்டினத்தில் இருந்து சிறுவன் விழுந்து பலியான சம்பவத்தால் நாங்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளோம். என்ன நடந்தது என்பதை அறிய எல்லா விசாரணைக்கும் நாங்கள் ஒத்துழைப்போம் என கூறியுள்ளார்.