பிஷ்னோய் கும்பலை தீவிரவாத இயக்கமாக அறிவிக்குமாறு கோரிக்கை
இந்தியாவை தளமாகக் கொண்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை தீவிரவாத அபமைப்பாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிராம்ப்டன் மேயர் பாட்ரிக் ப்ரவுன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்தக் கும்பலின் மோசமான செறய்பாடுகள் பீல் பகுதியிலேயே வேரூன்றியுள்ளதாகவும், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடா அரசாங்கம் அந்தக் குழுவை "தீவிரவாத அமைப்பாக" பிரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பிஷ்னோய் கும்பலை “தீவிரமான குற்றவாளிகளின் அமைப்பு” என பிரவுன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ப்ரவுனின் இந்தக் கோரிக்கை, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் டேவிட் எபி இதே கோரிக்கையை முன்வைத்த சில நாட்கள் கழித்து வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.