கொரோனா ஊரடங்கால் புதிய சிக்கலை எதிர்கொள்ளும் பிரிட்டன்
பிரிட்டனில் கொரோனா வைரஸ் ஊரடங்கு நிலையில் மனநல பிரச்சினைகள் வெகுவாக வளர்ந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “நேரடியான அறிகுறிகளாக நாம் கருதுவது, தொண்டை புண் போன்ற ஒன்று கூட, மனநல பிரச்சினைகளுடன் வருகின்றதாக நார்த் வேல்ஸில் அவசரகால 111 சேவைக்கான பயிற்சி குழுவின் உறுப்பினரான ரூத் லேண்டர் கூறினார். இந்நிலையில் “இது நிச்சயமாக நாம் பெறும் அழைப்புகளுக்கு மனநல அம்சங்களை அதிகரித்துள்ளது.
அவர்கள் வயதானவர்களாகவும் தனிமையுடன் போராடிக் கொண்டிருக்கலாம் அல்லது தனது ஆதரவு நெட்வொர்க்கை இழந்து போராடும் ஒரு இளம் அம்மாவும் இருக்கலாம்” என்றும் லேண்டர் கூறினார். மக்கள் கவலைப்படுகிறார்கள், அவர்கள் பயப்படுகிறார்கள்.
அதுதான் இந்த சேவையின் நன்மை, ஏனென்றால் அந்த நோயாளிகளுக்கு நாங்கள் விளக்கி உதவ முடியும் என்றும் அவர் கூறினார். இதேவெளை வெல்ஷ் ஆம்புலன்ஸ் சேவையின் தலைமை நிர்வாகி ஜேசன் கில்லென்ஸின் கூறுகையில், மனநல உதவி குறித்த பொது விழிப்புணர்வைக் கொண்டிருந்தாலும், ஊரடங்கினால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன் “எங்கள் சமூகங்கள் முழுவதும் மக்கள் தங்கள் வாழ்க்கையில் வெவ்வேறு அழுத்தங்களை அனுபவிப்பதால் இந்த சிக்கல்கள் அதிகரிக்கும் என்றும் அவை இன்னும் சிக்கலானதாக மாறும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றும் கில்லென்ஸ் கூறினார். “எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலர் வேலை இழந்துவிட்டார்கள். நிச்சயமாக இது கவலை மற்றும் மனநலப் பிரச்சினைகளையும் உருவாக்குகிறதாகவும் கூறிய அவர், சமீபத்திய ஆண்டுகளில் மனநலத்திற்கு உடல்நலத்துடன் சமத்துவம் தேவை என்பதற்கான அங்கீகாரம் அதிகரித்து வருகிறதாகவும் அவர் கூறினார்.
மேலும் எங்கள் சேவையில் ஒரு சிறிய எண்ணிக்கையிலான மனநல மருத்துவர்களைப் பெற்றுள்ளோம். இந்த ஆண்டு அதை விரிவுபடுத்த எதிர்பார்க்கிறோம். நாங்கள் செய்யக்கூடியது இன்னும் அதிகமாக உள்ளது என்பதையும், நாங்கள் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதையும் நாங்கள் உணர்கிறோம் என்றார்.
கொரோனா தொற்றுநோயின் காரணமாக இங்கிலாந்து தற்போது மூன்றாவது தேசிய ஊரடங்கின் கீழ் உள்ளது. ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்திலும் இதே போன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.