ரஷ்யாவை மேலும் கோவப்படுத்தும் பிரித்தானியா!
பிரித்தானியா உக்ரேனுக்கு £1 பில்லியன் இராணுவ உதவியை வழங்கும் எனவும், இதன் மூலம் ரஷ்ய படையெடுப்பை மேலும் பிரித்தானியா கோவப்படுத்துவதாக தெரிகிறது.
புதிய நிதியுதவி உக்ரைனுக்கு வழங்கப்பட்ட இராணுவ உதவியை £2.3bn ஆக உயர்த்துகிறது. அத்துடன், பிரித்தானிய மனிதாபிமான மற்றும் பொருளாதார ஆதரவிற்காக £1.5bn ஐ உக்ரைனுக்கு செலவிட்டுள்ளது.
பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை உக்ரைனின் பாதுகாப்பை மாற்றுகிறது என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன்(Boris Johnson) தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் போர் முயற்சிகளுக்கு மேலும் உதவுமாறு நேட்டோ தலைவர்களை ஜனாதிபதி வோலோடிமர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zhelensky)வலியுறுத்தியதை அடுத்து இந்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.
உக்ரைனுக்கான மாதாந்திர பாதுகாப்புச் செலவு சுமார் 5 பில்லியன் டொலர்கள் (£4.12bn) ஆகும் என்று ஜெலென்ஸ்கி(Volodymyr Zhelensky) நேட்டோ தலைவர்களிடம் கூறினார்.
உக்ரைனுக்கான இராணுவ உதவியின் அடிப்படையில் பிரித்தானியா அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா சமீபத்தில் 40 பில்லியன் டொலர் (£33bn) ஆதரவுப் பொதிக்கு ஒப்புதல் அளித்தது.
பிரித்தானியாவின் புதிய உதவியானது அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், ட்ரோன்கள், மின்னணு போர் கருவிகள் மற்றும் ஆயிரக்கணக்கான முக்கிய கருவிகள் ஆகியவற்றை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் என்று இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.