பிரிட்டனில் பிறந்த 2 அடி உயரமுள்ள குழந்தை
பிரிட்டனில் இளம்பெண் ஒருவர் 2 அடி உயரமுள்ள குழந்தையை பெற்றெடுத்த சம்பவம், அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பக்கிங்கம்ஷைர் பகுதியில் ஜாக் - ஏமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். கர்ப்பம் தரித்திருந்த 27 வயதான ஏமி, சமீபத்தில் லண்டன் மருத்துவமனையில் ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை 2 அடி உயரமும் 5.5 கிலோ எடையுடனும் பிறந்தது.
சராசரி குழந்தையைவிட இந்த குழந்தை இரண்டு மடங்கு பெரியதாக இருந்தது. அறுவை சிகிச்சையின்போது இந்த குழந்தையை, இரண்டு மருத்துவர்கள் சேர்ந்து வெளியே எடுத்ததாகவும், எடை பார்க்கும் இயந்திரத்தின் மீது வைக்க முடியாத அளவுக்கு அந்த குழந்தை பெரிதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த குழந்தைக்கு, ஜாக்ரிஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏமி கூறியதாவது: என் குழந்தை உயரமாக பிறக்கும் என்பதை, முன்பே 'ஸ்கேன்' வாயிலாக அறிந்தேன். எனினும், இவ்வளவு உயரமாக பிறக்கும் என நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.