பிரிட்டிஷ் கொலம்பிய அதிகாரிகள் காட்டுத்தீ தொடர்பில் சுற்றுலாப்பயணிகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
கனடாவில் பல்வேறு இடங்களில் காட்டுத்தீ பற்றியெரிந்துகொண்டிருக்கும் நிலையில், அப்பகுதிகளைக் காண்பதற்காக செல்லவேண்டாம் என அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Sicamous பகுதி மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு அமுலில் இருக்கும் நிலையில் அவர்களை சந்தித்த அதிகாரிகள், சீக்கிரத்தில் வெளியேற தயாராக இருக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார்கள்.
அத்துடன், அப்பகுதியைக் காண பெட்டி படுக்கைகளுடன் வரும் சுற்றுலாப்பயணிகளை வரவேண்டாம் என்று கூறியுள்ள அதிகாரிகள், இந்த நேரத்தில் அபாய பகுதிகளுக்கு மக்கள் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, இது ஒரு ரிசார்ட் பகுதி என்பது உண்மைதான். உணவுக்கும் வருவாய்க்கும் சுற்றுலாப்பயணிகளை நம்பித்தான் இங்குள்ள பலர் இருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது. ஆனால், இப்போது மக்கள் பாதுகாப்பாக இருப்பதுதான் முக்கியம் என்றார்.
ஆகவே சுற்றுலாப்பயணிகள் இப்போதைக்கு இந்த அபாய இடங்களைக் காணவரவேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.