கனடாவின் வெப்பத்தால் உயிரிழந்தது மனிதர்கள் மட்டுமல்ல... ஆய்வாளர் வெளியிட்டுள்ள வருத்தமளிக்கும் தகவல்
கனடாவின் அதீத வெப்பத்தால் உயிரிழந்தது மனிதர்கள் மட்டுமல்ல, கடல் உயிரினங்களும் என்கிறார் ஆய்வாளர் ஒருவர்.
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக கடல் உயிரியலாளரான Chris Harley வான்கூவரின் Kitsilano கடற்கரையில் நடந்து சென்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது மரணத்தின் வாசனையை தான் உணர்ந்ததாக தெரிவிக்கிறார் Chris.
ஆம், கடற்கரை முழுவதிலும் mussels, clams, sea stars மற்றும் நத்தைகள் முதலான சிப்பி வகை உயிர்கள் உயிரிழந்து கிடப்பதை அவர் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அத்துடன், அவை இறந்து அழுகிப்போனதால் அங்கு கடுமையான துர்நாற்றமும் வீசுகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிலவும் வரலாறு காணாத வெப்பம், ஒரு மில்லியனுக்கும் அதிகமான கடற்கரை வாழ் உயிரினங்களைக் கொன்றிருக்கலாம் என கருதுகிறார்.
இதில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், இறந்து அழுகிப்போன இந்த கடல் உயிரினங்களால் தண்ணீரின் தரமும் பாதிக்கப்படும் என்பதுதான்!