விமானத்தில் கோளாறு ; அவசரமாக தரையிறக்கப்பட்ட இங்கிலாந்து போர் விமானம்
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இங்கிலாந்து போர் விமானம் ஒன்று ஜப்பானில் அவசரமாக தரையிறப்பட்டது.
இங்கிலாந்து விமானப்படையில் அதிநவீன எப்-35 ரக போர் விமானங்கள் உள்ளன. உலகின் மிகவும் அதிநவீன போர் விமானங்களாக எப்-35 ரக போர் விமானங்கள் கருதப்படுகின்றன.
அமெரிக்கா - ஜப்பான் - இங்கிலாந்து போர் பயிற்சி
இதனிடையே, அமெரிக்கா - ஜப்பான் - இங்கிலாந்து கடற்படைகள் இணைந்து தென்சீன கடற்பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதில், இங்கிலாந்தின் விமானம் தாங்கி போர் கப்பல்களும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், ஜப்பான் கடற்பகுதியில் தென் சீன கடலில் இங்கிலாந்து விமானப்படைக்கு சொந்தமான எப்-35 ரக போர் விமானம் இன்று காலை 11.30 மணியளவில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக எப்-35 ரக போர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை அறிந்த விமானி, போர் விமானத்தை ஜப்பானின் ககோஷிமா சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவரசமாக தரையிறக்கினார்.
இதனால், விமான நிலையத்தில் 30 நிமிடங்களுக்கு பயணிகள் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
அதேவேளை முன்னதாக, கடந்த மாதம் 14ம் தேதி இங்கிலாந்து விமானப்படைக்கு சொந்தமான எப்-35 ரக போர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்நிலையில் தற்போது 2வது முறையாக எப்-35 ரக போர் விமானம் ஜப்பானில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.