ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் பிரிட்டன் பிரதமர் ரிக்ஷி சுனாக் விடுத்த எச்சரிக்கை!
சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களிற்கு எதிராக பொலிஸாரை பயன்படுத்தப்போவதாக பிரிட்டன் பிரதமர் ரிக்ஷி சுனாக் எச்சரித்துள்ளார் .
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் சுயநலமிக்க சிறிய குழுவினரால் பொதுமக்களின் வாழ்க்கைக்குபாதிப்பு ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில சூழல் பாதுகாப்பு அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சர் சுயல்லா பிராவெர்மன் பொலிஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள நிலையில் பிரதமர் ரிஷியும் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
அதோடு சட்டத்தை மீறுபவர்கள் அதற்கான விளைவுகளை முழுமையாக அனுபவிக்கவேண்டும் என்பதே எனது கருத்து என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸாருக்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரிக்ஷி சுனாக் கூறியுள்ளார்.