நீர்ச்சறுக்கு உடைந்ததால் 30 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த குழந்தைகள்!
இந்தோனேசியாவில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் நீர்ச்சறுக்கு பாதியாக உடைந்ததால் குழந்தைகள் 30 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஜாவாவின் சுரபயா நகரில் உள்ள கெஞ்சரன் பூங்காவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பொழுதுபோக்கு பூங்காவில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது நீர்ச்சறுக்கு சரிந்து கீழே விழுந்தனர்.
நீரில் சறுக்கில் சறுகி விளையாட பயணிகள் காத்திருந்த நிலையில், திடீரென சறுக்கு உடைந்து 30 மீட்டர் உயரத்தில் இருந்து பயணிகள் கீழே வீழுந்ததில் 16 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
8 பேருக்கு மேல் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் பயணிகளின் பாரம் தாங்காமல் நீர் சறுக்கு உடைந்து இருக்கக் கூடும் என பூங்கா நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்கான செலவை பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் வழங்கும் என்று சுரபயா மேயர் கூறினார்.
அதிகாரிகள் பொழுதுபோக்கு பூங்காவை மூடிவிட்டு, சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், அப்பகுதியில் உள்ள மற்ற பூங்காக்கள் உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.