துப்பாக்கி குண்டுக்கு பலியான இரு சகோதரர்கள்: வெளிவரும் அவர்களின் பின்னணி
ஒட்டாவா பகுதியில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட இரு சகோதரர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஒட்டாவா பகுதியில், வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் வெள்ளிக்கிழமை மாலை சகோதரர்கள் இருவர் துப்பாக்கி குண்டுக்கு பலியாகியுள்ளனர்.
கொல்லப்பட்ட இருவரும் Abdullaziz(34), மற்றும் Mohamad(27) என அடையாளம் காண்ப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கி குண்டு காயங்களுடன் இவர்களின் இன்னொரு சகோதரர் உயிர் தப்பியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
Fawaz Abdullah என்ற அந்த நபர் காலில் குண்டடிப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் இது திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றே பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், Fawaz Abdullah என்பவரே, சகோதரர்கள் கொல்லப்பட்ட தகவலை தாயாருக்கும் சகோதரிக்கும் தெரியப்படுத்தியுள்ளார். குவைத் நாட்டவர்களான அப்துல்லா சகோதரர்கள் மீது கனடாவில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளது.
அதில் பல வழக்குகளில் விசாரணையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. Fawaz என்பவர் கொலை முயற்சி வழக்கில் சிக்கி, 3 ஆண்டுகள் மற்றும் 131 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவித்தவர்.
அப்துல்லா சகோதரர்களின் இறப்பு, இந்த ஆண்டில் ஒட்டாவா பகுதில் நடக்கும் 5-வது மற்றும் 6-வது படுகொலை சம்பவம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தற்போது இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் என பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.