பிரித்தானியாவை திரும்பிப் பார்க்க வைத்த இந்திய வம்சாவளி சகோதரர்கள்!
இந்திய வம்சாவளி கோடீஸ்வர சகோதரர்கள் பிரித்தானியாவின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தை வாங்குவதற்கான முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சகோதரர்கள் மொஹ்சின் (Mohsin Issa) மற்றும் ஜுபைர் (Zubair Issa) ஆகியோர் பிரித்தனையாவின் சூப்பர் மார்ட் ASDE-யை அமெரிக்க நிறுவனமான வால்மார்ட்டிடம் (Walmart) இருந்து வாங்கவுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் சுமார் இந்திய பணமதிப்பில் ரூ.70,000 கோடி ($ 8.8 பில்லியன்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Issa சகோதரர்களின் பெற்றோர் 1970-ல் குஜராத்தில் இருந்து பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தனர்.
இப்போது, இரு சகோதரர்களும் பிரித்தானியாவில் நன்கு அறியப்பட்ட பெட்ரோல் பம்புகளின் சங்கிலியான யூரோ கேரேஜின் உரிமையாளர்கள் ஆவர்.
71 ஆண்டுகள் பழமையான சூப்பர் மார்க்கெட்
பிரித்தானியாவின் டிடிஆர் கேபிட்டலுடன் இணைந்து Issa சகோதரர்கள் இந்த சூப்பர் மார்க்கெட்டை வாங்குகின்றனர். 71 ஆண்டுகள் பழமையான இந்த சூப்பர் மார்க்கெட் சங்கிலியின் கட்டளை 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரிட்டனின் கைகளுக்கு வரவுள்ளது.
இது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என பிரித்தானியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் (Rishi Sunak) இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் சுனக் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என். நாராயண் மூர்த்தியின் மருமகன். முன்னாள் நிதியமைச்சரான ரிஷி, இப்போது பிரித்தானியாவின் பிரதமர் பதவிக்கும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை பொறுப்பிற்கும் லிஸ் டிரஸுக்கு எதிராக போட்டியிட்டு வருகிறார்.