எரிந்து சாம்பலான வாகனத்தில் கருகிய நிலையில் மனித உடல்
ஒன்ராறியோவில் எரிந்து மொத்தமும் சேதமான வாகனத்தில் கருகிய நிலையில் மனித உடலை பொலிசார் மீட்டுள்ளனர்.
ஒன்ராறியோவில் மேற்கு Sudbury நகரிலேயே குறித்த சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது. பிரதான சாலை 17கு வடக்கே 5 கி.மீ தொலைவில் ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு மேல் வாகனம் ஒன்று தீப்பற்றி எரிவதாக Stinson தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
மார்க்ஸ்டே-வாரனில் உள்ள குககாமி ஏரி சாலையில் இந்த விபத்து நடப்பதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிசார், முற்றாக எரிந்த வாகனத்தில் கருகிய நிலையில் மனித உடல் ஒன்றை மீட்டுள்ளனர்.
இதுவரை அந்த நபரின் அடையாளம் காணப்படவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் ஒன்ராறியோ முதன்மை உடற்கூராய்வு அலுவலகம், தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
மர்மம் விலகாத இச்சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை அதிகாரிகளும் களமிறக்கப்பட்டுள்ளனர்.