பிரபல நாட்டில் சோகம்! ஆற்றில் பஸ் கவிழ்ந்து கோர விபத்து.. 23 பேர் பரிதாப பலி
கென்யா நாட்டில் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 23 பேர் பலியாகியுள்ளனர்.
கென்யா நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் முன்னுள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. தலைநகர் நைரோபியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் ஒரு திருமண மண்டபம் உள்ளது.
இந்நிலையில் அங்கு நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேவாலயம் ஒன்றின் பாடகர் குழுவினர் ஒரு பஸ்சில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர். அப்போது என்சியூ என்ற ஆற்றின் பாலத்தின் வெள்ள நீர் வேகமாக ஓடி கொண்டிருந்தது.
இதையடுத்து பஸ் பாலத்தை கடக்க முயற்சி செய்த போது அந்த பஸ் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 23 பேர் பலியானதாக கூறுகின்றன.
அவர்களில் 4 பேர் குழந்தைகள் மற்றும் 12 பேர் மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது. இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அந்த மாகாண கவர்னர் நகிலு இரங்கல் தெரிவித்துள்ளார்.