நேருக்கு நேர் மோதிய பேருந்து - லொறி... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 14 பேர் பலி!
வங்கதேசத்தின் பரீத்பூர் பகுதியில் உள்ள தாக்கா-குல்னா நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்றையதினம் (16-04-2024) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 பேரும், மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வங்கதேச அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.