ஆப்கானிஸ்தான் தொடர்பில் கனடாவின் நிலை குறித்து விளக்கவிருக்கும் அமைச்சர்கள்
குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டிசினோ மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மூன்று பேர் இன்று காலை ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து விளக்கமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை காபூல் விமான நிலையத்தில் இருந்து மேலும் 106 ஆப்கானியர்களை கனடிய நிர்வாகம் மீட்டுள்ளதாக அரசு தரப்பு உறுதி செய்த நிலையில் இந்த செய்தியாளர் சந்திப்பு முன்னெடுக்கப்படுகிறது.
அமைச்சர் மெண்டிசினோ உடன் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன், வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ மற்றும் பெண்கள் மற்றும் பாலின சமத்துவ அமைச்சர் மரியம் மொன்செஃப் ஆகியோரும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் பிடியில் சிக்கிய பின்னர், இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை 106 உள்ளூர் மக்களை மீட்டு வந்துள்ளனர்.
வியாழக்கிழமை மீட்கப்பட்டவர்களில் 175 பேர்கள் ஆப்கான் மக்கள் எனவும் 13 பேர்கள் வெளிநாட்டவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.