கூலித் தொழிலாளர்களை கிரிக்கட் வீரர்களாக்கி ரஸ்யர்களை முட்டாளாக்கிய இந்திய கும்பல்
போலி கிரிக்கட் வீரர்களைக் கொண்டு ரஸ்ய சூதாட்டக்காரர்களிடமிருந்து பணம் கரக்கப்பட்ட விநோத சம்பவமொன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.
கூலித் தொழிலாளர்களை கிரிக்கட் வீரர்கள் போன்று ஆடை அணியச் செய்து, உண்மையில் போட்டித் தொடர் ஒன்று நடைபெறுவது போன்று இணையத்தில் ஒளிபரப்புச் செய்து இவ்வாறு சூதாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐ.பீ.எல் மற்றும் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இடம்பெறும் அனைத்து அம்சங்களையும் கொண்ட வகையில் இந்த போலி கிரிக்கட் சுற்றுப் போட்டி நடாத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இந்த வினோத சம்பவம் பதிவாகியுள்ளது. போலியான அணிகள் பெயர்கள் உருவாக்கப்பட்டு, கூலித் தொழிலாளர்கள் கிரிக்கட் வீரர்கள் போன்று நடித்து இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது.
நேரலையாக யூடியுப்பில் ஒளிபரப்புச் செய்யப்பட்டு ரஸ்ய சூதாட்டக்காரர்களை நம்பச் செய்த்தன் காரணமாக அவர்கள் இந்த சூதாட்டத்திற்காக பணம் செலுத்தியுள்ளனர்.
சர்வதேச கிரிக்கட் போட்டிகளின் நடுவர்கள் போன்று இந்தப் போட்டியின் நடுவர்களும் கைகளில் வோல்கி டோக்கிகள் வைத்திருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வால்கி டோக்கிகள் உண்மையில் சூதாட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. போட்டியின் நடுவர்கள், கிரிக்கட் வீரர்களாக வேடமிட்டிருந்த கூலித்தொழிலாளர்கள் அடுத்த பந்திற்கு என்ன செய்ய வேண்டும் அவுட் ஆக வேண்டுமா எத்தனை ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்பது பற்றிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
போட்டியை கண்டு களிக்கும் ரசிகர்களின் சத்தம், நேரலையில் பயன்படுத்தப்படும் கமரா கோணங்கள் என்பன பயன்படுத்தப்பட்டு தத்ரூபமாக இந்த நூதன சூதாட்ட முயற்சி மேற்கோள்ளப்பட்டுள்ளது.
கிரிக்கட் போட்டிகளில் இவ்வாறு சூதாட்டம் இடம்பெறுவது வழமையானது என்பது குறிப்பிடத்தக்கது
. எனினும், இந்தியாவில் கிரிக்கட் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் தத்ரூபமாகவே இந்தியாவில் முக்கிய கிரிக்கட் லீக் போட்டியொன்று நடைபெறுவதாக நாடகமாடி அதனை இணையத்தில் ஒளிபரப்புச் செய்து, ரஸ்ய சூதாட்டக்காரர்களிடம் பணம் கரக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குஜராத் மாநிலத்தின் மிஷானா மாவட்ட பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.