அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் வழங்கிய கனடா
அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்த கனடா அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. கொவிட்-19 தொடர்பான அனைத்து மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை விவரிக்கும் ஹெல்த் கனடாவின் வலைத்தளத்தின்படி, அஸ்ட்ராஸெனெகா 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்தது.
ஒப்புதலை அறிவிக்கும் போது, இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்-19) தடுப்புக்காக 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு தீவிரமாக நோய்த்தடுப்பு செய்வதாக சுட்டிக்காட்டப்படுவதாக அரச நிறுவனம் கூறியுள்ளது.
இந்த தடுப்பூசியின் 20 மில்லியன் மருந்து அளவைப் பெற கனடாவுக்கு ஒரு ஒப்பந்தம் உள்ளது.
இந்நிலையில் அஸ்ட்ராஸெனெகாவின் தடுப்பூசியை பயன்படுத்த கனடா அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.