மேலும் மூன்று ஆண்டுகள் நீடிப்பு: கனேடிய பிரதமர் அறிவிப்பு!
வழங்கி வரும் இராணுவ ஒத்துழைப்பினை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிப்பதாக கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிர்வரும் நாட்களில் மேலும் அறுபது படைவீரர்களை அனுப்பி வைக்கவுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் படைவீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் நடவடிக்கைக்கான உடன்படிக்கை எதிர்வரும் மார்ச் மாதத்துடன் கலாவதியாக உள்ள நிலையில், இராணுவ ஒத்துழைப்பினை நீடிப்பதாக பிரதமர் ஜ்ஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஒவ்வொரு ஆறு மாத காலத்திற்கு ஒரு தடவையும் 200 கனேடிய படையினர் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய படையினர் உக்ரைன் மீது எந்த நேரத்திலும் படையெடுக்கக் கூடும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில் கனடா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.