கனடாவில் ஒரே நாளில் புதிதாக 27 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 27 ஆயிரத்து 995 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து கனடாவில் 21 இலட்சத்து 30 ஆயிரத்து 469 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30 ஆயிரத்து 265 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
கனடாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 2 இலட்சத்து 30 ஆயிரத்து 962 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 455 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4,443 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரையில் 18 இலட்சத்து 69 ஆயிரத்து 242 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.