கனடாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 11 ஆயிரத்து 47 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 122 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் இதுவரையில் 31 இலட்சத்து 5 ஆயிரத்து 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 34 ஆயிரத்து 488 பேர் மரணமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
கனடாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 1 இலட்சத்து 78 ஆயிரத்து 255 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், coronavirus தொற்றால் 1,140 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 192 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 28 இலட்சத்து 92 ஆயிரத்து 441 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.