எரிந்த நிலையில் சாக்கடைக்குள் கண்டெடுக்கப்பட்ட உடல்... 44 ஆண்டுகளுக்குப்பின் தெரியவந்த உண்மைகள்
எட்மண்டனில், 44 ஆண்டுகளுக்குமுன் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஒருவரது உடல், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
1977ஆம் ஆண்டு, Charlie McLeod என்பவர் தன்னுடைய பண்ணையில் ஒரு பொருளைத் தேடிச்செல்லும்போது, சாக்கடை ஒன்றிலிருந்து ஷூ அணிந்த ஒரு கால் நீட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
பொலிசார் வந்து அந்த உடலை மீட்டபோது, அவர்களும் Charlieயும் கண்ட காட்சி, மிகவும் கோரமாக இருந்தது. 26 முதல் 32 வயது மதிக்கத்தக்க ஒருவர், கயிற்றால் கட்டப்பட்டு, ஆணுறுப்பு அறுக்கப்பட்டு, தீ வைத்து கொளுத்தப்பட்டு, அடித்து நொறுக்கப்பட்டு, நெஞ்சிலும் தலையிலும் துப்பாக்கியால் சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டிருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த பொலிசாரான Sgt. Ed Lammerts, இவ்வளவு கொடூரமாக யாராவது கொலை செய்வார்களா என்று எனக்கே தெரியவில்லை, அந்த உடலுக்குரியவர் ஆணா அல்லது பெண்ணா என்று கூட முதலில் கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு மிக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு, கடுமையான வலியை அனுபவித்துக் கொல்லப்பட்டிருந்தார் என்கிறார்.
இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகளாக அவர் யார் என்பதே தெரியாமல் இருந்தது. இப்போது, கொலை நடந்து 44 ஆண்டுகளுக்குப் பின் DNA முறையில் அந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிசாரால் செப்டிக் டேங்க் சாம் என அழைக்கப்படும் அவரது உண்மையான விவரங்கள் சீக்கிரத்தில் வெளியிடப்பட உள்ளன. இனி, கொலைகாரணைக் கண்டுபிடிக்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால், இனி அந்த கொலைகாரனை எப்படி தண்டிக்கப்போகிறோம் என கேள்வி எழுப்புகிறார் Sgt. Ed Lammerts.
ஒரு 82 வயது மனிதரை கைது செய்து, 50 ஆண்டுகளுக்கு முன் அவர் செய்த குற்றத்துக்காக அவரை சிறைக்கு அனுப்பப்போகிறோமா? அது எப்படிப்பட்ட தண்டனையாக இருக்கும் என்கிறார் அவர்.
இந்நிலையில், கண்டெடுக்கப்பட்ட சாமின் உடல் முறைப்படி எட்மண்டனிலுள்ள கல்லறை ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்த விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.