அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த கனடா
கட்டாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடரின் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பினை கனடா இழந்தது.
பலம்பொருந்திய குரேஷியா அணியுடன் இடம்பெற்ற போட்டியில் கனடா ஒன்றுக்கு நான்கு என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
கனேடிய அணியின் சார்பில் அல்பொன்சோ டேவிஸ் கோல் ஒன்றை போட்டார். எனினும் உலக தரப் படுத்தலில் 12ம் நிலையை வகிக்கும் குரேஷிய அணி வீரர்கள் அபாரமாக விளையாடி நான்கு கோல்களைப் போட்டனர்.
அன்ட்ரேஜ் க்ராமாரிக் இரண்டு கோல்களையும், மார்க்கோ லிவாஜா மற்றும் லொவ்ரோ மாஜிர் ஆகியோர் தலா ஒரு கோலையும் போட்டனர்.
போட்டியின் முடிவு ஏமாற்றமளிப்பதாகவும் போட்டி முழுவதிலும் கடுமையாக போராடியதாகவும் கனேடிய நட்சத்திர வீரர் அல்பொன்சோ டேவிஸ் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
போட்டி ஆரம்பிக்கப்பட்டு 67ம் செக்கனில் கனேடிய அணி கோல் ஒன்றைப் போட்டு குரேஷியாவை திணடித்தது.
எனினும் அதன் பின்னர் போட்டியின் கட்டுப்பாட்டை தக்க வைத்துக் கொள்வதற்கு கனடா அணியினால் முடியவில்லை.
கனேடிய உலக்க் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக கோல் அடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
36 ஆண்டுகளில் இதுவே முதன் முறையாக எதிரணிக்கு எதிராக கோல் அடிக்கப்பட்டுள்ளது.