உக்ரைன் மக்களுக்கு உதவ தயாராகும் கனடா
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்ய ஊடுருவலைத் தொடர்ந்து போரில் இருந்து தப்பிச் செல்லும் உக்ரேனியர்களை விரைவாக வரவேற்கும் திட்டத்தை உருவாக்கி வருவதாகக் கூறினார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரைத் தொடர்ந்து 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக உக்ரைனில் இருந்து கனேடிய குடிவரவு அமைச்சகத்திற்கு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே கனடாவுக்கு வந்தவர்களும், உக்ரைனில் இருந்து தப்பிச் செல்பவர்களும், இந்த அநியாயப் போர் முடிந்த பின்னரும், கனடாவில் தங்கி விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடிய விரைவில் கனடாவுக்கு வர வேண்டும் என்று ட்ரூடோ கூறினார்.
உக்ரேனியர்கள் பணி அனுமதிப்பத்திரத்தில் கனடாவுக்கு வருவதை உறுதிப்படுத்தவும் ஏற்கனவே கனடாவிற்கு வந்தவர்களின் பணி அனுமதியை நீட்டித்து கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஜனவரி 19 முதல் சுமார் 4,000 உக்ரேனியர்களின் குடியேற்ற விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ள குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர், ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கக்கூடும் என்ற தகவலைப் பெற்ற பின்னர் விண்ணப்பங்களின் வருகையை வரவேற்க கனடா ஒரு மாதத்திற்கு முன்பே ஆயத்தங்களைத் தொடங்கியதாகக் கூறினார்.