கனடா அமைப்பால் கொழும்பில் கௌரவிக்கப்பட்ட 100 தமிழ்ப் பெண்கள்!
கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் கனடா 'விழித்தெழு பெண்ணே'அமைபபின் ஏற்பாட்டில் கடந்த 21ம் திகதி கொழும்பு GLOBAL TOWERS LOUNGE HALL மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ்ப் பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் பெருவிழாவில் இலங்கைப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர்கலந்து சிறப்பித்தனர்.
100 பெண்மணிகள் கௌரவிக்கப்பட்ட இந்த பெருவிழாவில் இலங்கையில் பல்வேறு மாகாணங்களில் வாழும் பெண்மணிகளுள் கலை இலக்கியம் சமூக சேவை, நாடகம், சினிமா, சமயப் பணி போன்ற துறைகளில் மிகுந்;த ஈடுபாட்டுடன் பங்காற்றி வரும் வெற்றியாளர்கள் இந்த விழாவில் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் தங்கள் விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.
விருது பெற்றவர்களில் பிரபல எழுத்தாளர் அன்னலட்சுமி இராஜதுரை மற்றும் ஶ்ரீமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதன் ஆகியோரும் அடங்கியிருந்தனர்.
இந்த நிலையில் விருதுகள் வழங்கும் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த கனடா விழித்தெழு பெண்ணே' அமைப்பின் தலைவி திருமதி சசிகலா நரேன் மற்றும் அவரது குழுவினருக்கு பலரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.