கனடாவில் அதிகரிக்கும் வேலையிழப்பு! கடந்த மாதத்தில் மட்டும் இத்தனை லட்சமா?
கனடாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 207,000 பேர் தங்களது வேலையை இழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் 129,000 பேர் முழு நேர பணியாளர்கள் என்றும், 78,000 பேர் பகுதி நேர பணியாளர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் 175,000 வேலை இழப்புகள் ஏற்படலாம் என நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், 207,000 பேர் என்பது அதிகமான ஒன்று என வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதில் பெரும்பாலானவர்கள் 15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைய சமுதாயத்தினர் ஆவர், உணவு உற்பத்தி, சில்லறை வர்த்தகத்தில் அதிகளவு வேலை இழப்பு நடந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு தன்னுடைய சலூனை தொடங்கிய Tyler Lumb, கொரோனாவால் 2020ம் ஆண்டு மூடிவிட்டார், மீண்டும் அதை திறக்க முடியுமா என்ற சந்தேகமும் அவருக்கு எழுந்துள்ளது.
Canadian emergency response benefit மூலம் அவருக்கு சலுகைகள் கிடைத்தாலும், மாத வாடகைக்கே போதவில்லை என வருத்தம் தெரிவித்துள்ள Tyler Lumb, ஓராண்டு தான் வேலையில்லாமல் இருந்த கஷ்டங்களை விவரிக்கிறார்.
பொழுதுபோக்கு பூங்கா போன்ற வெளியிடங்களில் தன்னுடைய வேலையை தொடர்வதே தனக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பான ஒன்று என அவருடைய வேலையை தொடங்கிய நிலையில், தற்போது பூங்காக்களும் மூடப்பட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பெரிய வணிகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதாகவும் குற்றம்சுமத்தியுள்ளார்.