இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கும் கனடா
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், நாள்தோறும் 4 லட்சம் பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர், இதனால் நாட்டின் பல இடங்களில் ஆக்சிஜன், வென்டிலேட்டர் மற்றும் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது.
இதனையடுத்து உலக நாடுகள் பலவும் தங்களால் இயன்ற உதவியை இந்தியாவுக்கு வழங்கி வருகின்றன.
அந்த வகையில் கனடாவும் 10 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக அறிவித்தது, இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கவுள்ளதாக நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் Marc Garneau தெரிவித்துள்ளார்.
அதாவது, ராணுவ விமானத்தின் மூலம் 25,000 ரெம்டெசிவர் மருந்து குப்பிகள் மற்றும் 350 வென்டிலேட்டர்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவுடன் தொடர்ந்து கனடா உறுதுணையாக நிற்கும் என்றும், பேரழிவை உண்டாகும் வைரசுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.