கனடாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உடல்களை அடையாளம் காண உதவ முன்வந்துள்ள இராணுவம்
கனடாவில் உண்டுறை பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பூர்வக்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை அடையாளம் காணவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் Harjit Sajjanஇடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அந்த குழந்தைகளை அடையாளம் காணும் முயற்சியில் உதவ தாங்கள் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பூர்வக்குடியின தலைவர்கள் கேட்டுக்கொண்டால் இராணுவம் உதவ தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளரும், பூர்வக்குடியின் குழந்தைகளின் உடல்களை அடையாளம் காணத தயாராக இருப்பதாகவும், போர்க்காலங்களில் இறந்தவர்களின் எலும்புகள் முதலான பாகங்களை வைத்து, இறந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள், அதேபோல் நிபுணத்துவம் வாய்ந்த தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து இறந்தவர்களை கண்டுபிடிப்பார்கள் என்றும், அதற்குப் பின் உரிய கௌரவத்துடன் அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.