சிறுவனுக்கு தடுப்பூசியை மாற்றி ஏற்றிய கனடா சுகாதார அதிகாரிகள்!
கனடாவில் பைசர் தடுப்பூசியைப் போடுவதற்குச் சென்ற ராகின் சௌத்ரி என்ற 15 வயது சிறுவனுக்கு, தவறுதலாக மொடேனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் மைக்கல் காரோன் மருத்துவமனையின், வார்டன் ஹில்டொப் சமுதாய மையத்தில் உள்ள தடுப்பூசி மையத்திலேயே செவ்வாயன்று இடம்பெற்றுள்ளது.
இதேவேளை கனடிய சுகாதாரத் துறை 12 தொடக்கம் 17 வயது வரையான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் தாங்கள் பைசர் தடுப்பூசி பெற வந்திருப்பதாக அங்கிருந்தவரிடம் திரும்பத் திரும்பக் கூறியிருந்தும், மொடேர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டமை தெரியவந்துள்ளதாக சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தவறுக்காக மருத்துவமனை நிர்வாகம் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
