மெக்ஸிக்கோவில் கனடிய பிரஜை ஒருவருக்கு நேர்ந்த விபரீதம்!
மெக்ஸிக்கோவில் கனடிய பிரஜை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பியட்ரோ எஸ்கொன்டிடோ கரையோர நகரில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரு வார கால இடைவெளியில் மெக்ஸிக்கோவில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கனடிய சுற்றுலாப் பயணி காரியில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
விக்ட மாசோன் என்ற கனடியப் பிரஜையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த உயிரிழந்த நபர் கனடாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மெக்ஸிக்கோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.