இந்தியப் பிரதமர் மோடியை மாநாட்டில் பங்கேற்க அழைத்த கனேடிய பிரதமர்
கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் இந்த மாதம் இடம்பெறவுள்ள ஜி7 மாநாட்டில் பங்கேற்குமாறு இந்தியப் பிரதமருக்குக் கனேடிய பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவின் காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள உச்சி மாநாட்டில் மார்க் கார்னியை சந்திப்பதற்கு ஆவலுடன் இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்தியப் பிரதமர், இரு நாடுகளும் பரஸ்பர மரியாதையுடன் புதிய வீரியத்துடன் இணைந்து செயற்படும் எனத் தெரிவித்துள்ளார்.