கனடா பிரதமர் ட்ரூடோ இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டார்: எந்த நிறுவன தடுப்பூசி தெரியுமா?
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டார். ஏப்ரலில் முதல் டோஸாக ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட ட்ரூடோ, தற்போது இரண்டாவது டோஸாக மொடெர்னா நிறுவனத்தின் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
கனேடிய சுகாதாரத்துறையினர், முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள், இரண்டாவது டோஸாக வேறொரு தடுப்பூசி பெற்றுக்கொள்வது தொடர்பாக ஆலோசனைகள் அளித்துள்ளதைத் தொடர்ந்து ட்ரூடோவும், முதலில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியும், இரண்டாவதாக மொடெர்னா தடுப்பூசியும் பெற்றுக்கொண்டுள்ளார்.
நேற்று காலை அவரும், அவரது மனைவியும் Ottawaவிலுள்ள ஒரு மருந்தகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள்.
முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, தான் உணர்ச்சி வசப்பட்ட நிலைமையில் இருப்பதாக ட்ரூடோ தெரிவித்தார்.
தடுப்பூசி பெற்றுக்கொண்டதும் வழக்கமாக என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படுமோ அவற்றையே தானும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.