ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தலில் கனேடிய பிரதமர்! பரிசோதனையில் வெளிவந்த தகவல்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்ததை அறித்த நிலையில் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை "நேற்று இரவு, அவர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டதை அறிந்தேன்" என்று ட்ரூடோ வியாழக்கிழமை (27-01-2022) டீவிட்டர் பதிவில் கூறினார். பின்னர் அவர் மேற்கொண்ட விரைவான பரிசோதனையில் முடிவு எதிர்மறையாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Last night, I learned that I have been exposed to COVID-19. My rapid test result was negative. I am following @OttawaHealth rules and isolating for five days. I feel fine and will be working from home. Stay safe, everyone – and please get vaccinated.
— Justin Trudeau (@JustinTrudeau) January 27, 2022
இதேவேளை டீவிட்டரில் அவர் தெரிவித்தது, "நான் நன்றாக உணர்கிறேன், வீட்டிலிருந்து வேலை செய்வேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் - தயவுசெய்து தடுப்பூசி போடுங்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், 50 வயதான ட்ரூடோ, முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளார், ஜனவரி மாதம் ஒட்டாவாவில் உள்ள ஒரு மருந்தகத்தில் கோவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற்றார்.
இதேவேளை, மார்ச் 2020 யில், கொரோனா தொற்றுநோய் முதன்முதலில் கனடாவுக்கு வந்தபோது, அவரது மனைவி சோஃபி கிரிகோயர் பிரித்தானிய பயணத்தில் இருந்தபோது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பின்னர், ட்ரூடோவும் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.