ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தலில் கனேடிய பிரதமர்! பரிசோதனையில் வெளிவந்த தகவல்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்ததை அறித்த நிலையில் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை "நேற்று இரவு, அவர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டதை அறிந்தேன்" என்று ட்ரூடோ வியாழக்கிழமை (27-01-2022) டீவிட்டர் பதிவில் கூறினார். பின்னர் அவர் மேற்கொண்ட விரைவான பரிசோதனையில் முடிவு எதிர்மறையாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Last night, I learned that I have been exposed to COVID-19. My rapid test result was negative. I am following @OttawaHealth rules and isolating for five days. I feel fine and will be working from home. Stay safe, everyone – and please get vaccinated.
— Justin Trudeau (@JustinTrudeau) January 27, 2022
இதேவேளை டீவிட்டரில் அவர் தெரிவித்தது, "நான் நன்றாக உணர்கிறேன், வீட்டிலிருந்து வேலை செய்வேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் - தயவுசெய்து தடுப்பூசி போடுங்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், 50 வயதான ட்ரூடோ, முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளார், ஜனவரி மாதம் ஒட்டாவாவில் உள்ள ஒரு மருந்தகத்தில் கோவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற்றார்.
இதேவேளை, மார்ச் 2020 யில், கொரோனா தொற்றுநோய் முதன்முதலில் கனடாவுக்கு வந்தபோது, அவரது மனைவி சோஃபி கிரிகோயர் பிரித்தானிய பயணத்தில் இருந்தபோது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பின்னர், ட்ரூடோவும் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021