அந்த நாட்டுக்கு செல்லும் கனேடியர்கள் கவனம்: எச்சரிக்கும் சுகாதாரத்துறை
உகாண்டா நாட்டுக்கு பயணப்படும் கனேடியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கனேடிய சுகாதரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா தொற்று பரவல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலேயே கனடா சுகாதாரத்துறை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உகாண்டாவுக்குப் பயணம் செய்யும் மக்கள் கூடுதல் கவனமாக இருக்குமாறு ஊக்குவிக்கும் வகையில், லெவல் 2 பயண சுகாதார அறிவிப்பை கனேடிய அரசாங்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
மேலும், பயணத்திற்கு 6 வாரங்கள் முன்பு மருத்துவரை நாடி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உகாண்டாவில் இதுவரை நான்கு முறை எபோலா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளனது. கடந்த 2000 ஆண்டில் மிகவும் அதிகமாக பாதிப்புகளை ஏற்படுத்தியதுடன், 200 பேர்கள் வரையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
தற்போது ஆபத்து சதவீதம் 69 என உகாண்டா நிர்வாகம் அறிவித்துள்ளதுடன், இது உச்ச நிலை எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதுவரை நான்கு சுகாதார பணியாளர்கள் உட்பட 10 பேர்கள் மரணமடைந்துள்ளதுடன் 43 பேர்களுக்கு எபோலா உறுதி செய்யப்பட்டுள்ளது.