தாயின் கர்ப்பப்பைக்கு பதிலாக கல்லீரலுக்குள் வளரும் குழந்தை: கனடாவில் ஒரு அபூர்வ நிகழ்வு
கனடாவில், பெண் ஒருவர் மாதவிடாய் பிரச்சினைக்காக மருத்துவரிடம் சென்றுள்ளார்.
மருத்துவப் பரிசோதனையில், அவர் கர்ப்பமுற்றிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், அவரது கர்ப்பப்பையில் கருவைக் காணவில்லை.
ஆச்சரியமுற்ற மருத்துவர்கள் அவரை ஸ்கேன் பரிசோதனைகளுக்கு உட்படுத்த அவர்களுக்கு ஒரு மாபெரும் ஆச்சரியம் காத்திருந்தது.
ஆம், அந்தப் பெண்ணின் கல்லீரலுக்குள் அந்தக் கரு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
மனித்தோபாவைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான Dr Michael Narvey, இந்த விடயத்தைக் குறித்து சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
@nicu_musings Almost like the fetus is wearing a costume in there! #docsoftiktok #fypシ #foryourpage #doctor #pregnancy
♬ original sound - Dr Michael Narvey
அதாவது, பொதுவாக கருவுற்ற முட்டை, அதாவது கரு, பெண்ணின் கர்ப்பப்பைக்குள் வளரும். சில நேரங்களில் அது கர்ப்பப்பையை வந்தடைவதற்கு முன்பே, பாலோப்பியன் குழாய் ( fallopian tube) என்னும் இடத்தில் அமர்ந்து, அங்கேயே வளரத்தொடங்கிவிடும்.
இதை கர்ப்பப்பைக்கு வெளியிலான கருவுறுதல் (ectopic pregnancy) என்பார்கள். இத்தகைய கருவுறுதலின்போது, பொதுவாக அந்தக் கரு நீண்ட நாள் வளராது, அதாவது அந்தக் குழந்தை இறந்துவிடும். இதனால், தாய்க்கும் ஆபத்து ஏற்படலாம்.
ஆனால், இந்தப் பெண்ணின் விடயத்தில் கர்ப்பப்பைக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத கல்லீரலுக்குள் அமர்ந்து கரு வளரத் துவங்கியுள்ளது.
எனது அனுபவத்தில் நான் இப்படி ஒரு விடயத்தைப் பார்த்ததில்லை என்கிறார் மருத்துவர் Michael.
மருத்துவர்கள் அந்தப் பெண்ணைக் காப்பாற்றிவிட்டார்கள். ஆனால், அவரது குழந்தையை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை!