அலுவலக வேலையை விட்டுவிட்டு பண்ணை வேலைக்கு திரும்பிய கனேடிய பெண்: காரணம் இதுதான்
கனடாவில் அலுவலகம் ஒன்றில் 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஒரு பெண், தனது அலுவலக வேலையை விட்டுவிட்டு, பண்ணை வேலைக்குத் திரும்பியிருக்கிறார். ஒன்ராறியோவில் சிறுவர் மன நல அமைப்பு ஒன்றில் 20 ஆண்டுகளாக பணியாற்றிவந்தவர் Jenn Schooley.
இத்தனை ஆண்டுகளுக்குப் பின், தான் இருக்கவேண்டிய இடம் இதுவல்ல என்று தனது அலுவலக வேலையை விட்டு விட்டு, Norfolk பகுதியில் அமைந்துள்ள தன் தாயின் லாவண்டர் பண்ணைக்குத் திரும்பியிருக்கிறார் Schooley.
அவரது சகோதரியான Melissaவுக்கோ Schooley தங்கள் பெற்றோரின் பண்ணைக்குத் திரும்பியதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. Schooley தன் தந்தை சிறுவயதில் செலுத்திய ட்ராக்டருடன் சகதியில் இறங்க, Melissa பிஸினஸ் பக்கத்தை கவனித்துக்கொள்கிறார்.
சகோதரிகளின் தந்தை தோட்டக்கலையில் நிபுணத்துவம் பெற்றவர். அவர்களது தாய்க்கோ லாவண்டர் தோட்டம் அமைப்பது கனவு. 115 ஆண்டுகளாக அந்த குடும்பத்தினர் இந்த பண்ணையை நடத்திவந்த நிலையில், இனி தாங்கள் களமிறங்காவிட்டால், தங்கள் சந்ததியுடன் இந்த பண்ணை காணாமல் போய்விட வாய்ப்புள்ளது என்பதை புரிந்துகொண்ட சகோதரிகள் பண்ணை வேலையில் இறங்க, அவர்களது பெற்றோர் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கிறார்கள்.
எங்கள் பண்ணைக்கு யார் வந்தாலும், வாவ், இந்த இடம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று கூறி ஆச்சரியத்தில் வாய் பிளந்துவிடுகிறார்கள் என்கிறார் Melissa சிரித்துக்கொண்டே.
ஆம், சகோதரிகள் அந்த 115 ஆண்டு கால வரலாறு கொண்ட தங்கள் பண்ணையை நிச்சயம் காப்பாற்றுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.