கொரோனாவால் கனடாவில் நிகழ்ந்துள்ள ஒரு நல்ல விடயம்
கனடா அரசு, பல ஆண்டுகளாக புகையிலைக்கு எதிராக செய்துவந்த பிரச்சாரத்துக்கு, கொரோனா உதவியிருக்கிறது.
ஆம், கொரோனா காலகட்டத்தில், கனடாவில் புகை பிடிப்போரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துள்ளதாம். அது எப்படி வீட்டில் பெற்றோர் இருக்கும்போது, வீட்டை விட்டு வெளியே போய் சிகரெட் பற்றவைக்கத் தோன்றும்? நியாயம்தானே, என்கிறார் Waterloo பல்கலைக்கழக பொது சுகாதாரத்துறை பேராசிரியரான David Hammond.
2020 டிசம்பருக்கும் 2021ஜனவரிக்கும் இடையில், 8,112இடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், குறிப்பாக 20 முதல் 24 வயது உள்ளவர்களில் 5 சதவிகிதம் அளவுக்கு புகை பிடித்தல் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இன்னொரு பக்கம், 2019இலிருந்து அனைத்து வயதினரிடமும் புகைபிடித்தல் தொடர்பில் கிட்டத்தட்ட எந்த மாற்றமும் இல்லை என்பது அந்த ஆய்விலிருந்து தெரியவந்தது.
அதாவது புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை உயரவில்லை. கடந்த மாதத்தில், 15 முதல் 19 வரையுள்ளவர்களில் 14 சதவிகிதம் பேர் புகையிலை பயன்படுத்தியுள்ளார்கள்.
20 முதல் 24 வரையுள்ளவர்களில் 13 சதவிகிதம் பேர் புகையிலை பயன்படுத்தியுள்ளார்கள். 2019இல் இந்த எண்ணிக்கை, இரு சாராருக்குமே 15 சதவிகிதமாக இருந்தது.
ஆக, கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில், பலர் பல்வேறு காரணங்களுக்காக புகையிலை பயன்படுத்துவதை விட்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
கொரோனா காலகட்டத்தில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று கூறும் Hammond, அவை குறுகிய காலத்துடன் முடிவடைந்துவிடுமா அல்லது அவற்றின் தாக்கம் நீண்ட காலத்துக்கு இருக்குமா என்று கேட்கிறார்...