அமெரிக்கர்களுக்கான கட்டுப்பாடு தடைகளை தகர்த்தியது கனடா
கொரோனா பரவல் பிரச்னை காரணமாக அண்டை நாடான அமெரிக்காவைச் சோந்தவா்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை கனடா தளா்த்தியுள்ளது.
இதன்படி, அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவா்கள், தங்கள் நாட்டு கடைகளில் பொருள்களை வாங்குவதற்கும், விடுமுறையைக் கழிக்கவும் வேறு காரணங்களுக்காகவும் வந்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தனியான விண்ணப்பப் படிவத்தையும் கனடா அறிமுகப்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் கனடா நாட்டவா்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளா்த்தவில்லை.
அமெரிக்கா-கனடா இடையிலான எல்லைதான் உலகிலேயே நீளமான மற்றும் மக்கள் போக்குவரத்து அதிகமுள்ள தரைவழி எல்லைப் பகுதியாகும். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அமெரிக்க-கனடா எல்லை கடந்த 2020 மாா்ச் மாதம் மூடப்பட்டது.
கனடா மற்றும் மெக்ஸிகோ எல்லையைத் திறப்பது தொடா்பாக ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குப் பிறகுதான் முடிவெடுக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.