கனடாவில் முதியோர் காப்பகங்களில் பணியாற்றுவோர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஒன்ராறியோவில் நீண்ட கால முதியோர் காப்பகங்களில் பணியாற்றுவோர்களில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே இன்று அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் டோஸ் தடுப்பூசி போட்டுகொண்டதற்கான தரவுகளை சமர்ப்பிக்க முடியாத ஊழியர்கள், தடுப்பூசி போட விலக்கு அளிக்கப்பட்டதற்கான மருத்துவ சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
முதியோர் காப்பகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால் தொடர்புடைய அமைச்சு, தடுப்பூசிக்கான காலக்கெடுவை டிசம்பர் 13ம் திகதிக்கு தள்ளிவைத்துள்ளது.
முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கு கால அவகாசம் அளிக்கவே, காலக்கெடுவை தள்ளிவைத்துள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் நீண்டகால முதியோர் காப்பகங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 98 சதவீதம் பேர்கள் கொரோனாவுக்கான தடுப்பூசியில் குறைந்தபட்சம் ஒரு டோஸ் போட்டுகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.