ஈழத்தமிழர்களின் நன்றிக்குரிய சனல்–4 ஜோன் ஸ்னோ ஓய்வு பெறுகின்றார்
ஈழத்தமிழர்களின் நன்றிக்குரியவரும் ஈழத்தமிழர்களால் என்றுமே மறக்க முடியாதவருமான சேனல் 4 ஊடகத்தின் மூத்த, மிகச் சிறந்த செய்தித் தொகுப்பாளர் ஜொன் ஸ்னோ (Jon Snow) ஓய்வு பெறுகின்றார்.
32 ஆண்டுகள் சேவையாற்றிய பின்னர் சனல் – 4 ஊடகத்தின் செய்தித் தொகுப்பாளர் பணியில் இருந்து இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெறுவார் என ஜொன் ஸ்னோ (Jon Snow)ஏப்ரல் 30 இல் அறிவித்துள்ளார்.
உலகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ என்ற ஆவணப்படத்தினை தயாரித்த ஜொன் ஸ்னோ (Jon Snow), “உலக நாடுகள் பலவற்றில் காட்சிப்படுத்தப்பட்டும், உலக சமுதாயமும் ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கைக்குத் தண்டனை அளிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டன. இந்த தருணத்தில்தான் இந்தக் காட்சிகளை வெளியிடுகிறோம்” என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.