கனேடிய இளைஞர் மீது அவரது காதலி தெரிவித்த பகீர் குற்றச்சாட்டு
கனடாவில் இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 28 வயது நபர் பாலியல் கடத்தல் விசாரணையை எதிர்கொள்கிறார்.
கல்கரி பகுதியை சேர்ந்த 28 வயது இளைஞர் மீதே குறித்த இளம் பெண் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் தற்போது கைது நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த இளம் பெண் கைதான இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த நபர் குறித்த பெண் உடனான உறவை தவறாக பயன்படுத்திக்கொள்ள முயன்றதுடன், தகாத தொழிலுக்கும் கட்டாயப்படுத்தியுள்ளார்.
ஒருகட்டத்தில் அந்த நபரிடம் இருந்து தப்பிய குறித்த பெண், கல்கரி பொலிசாரிடம் நடந்தவற்றை கூறி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணை முன்னெடுத்த பொலிசார், Jordan Fay என்பவரை இந்த மாத துவக்கத்தில் கைது செய்தனர்.
அவர் மீது பல பிரிவுகளில் வழக்கும் பதிந்துள்ளனர்.
மேலும், Jordan Fay என்பவரால் பாதிக்கப்பட்ட பலர் இருக்கலாம் எனவும், அவர்கள் முன்வந்து வாக்குமூலம் அளிக்க வேண்டும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.