தனிவிமானம் மூலம் கொரோனா சிகிச்சைக்காக சென்னை வந்த தொழிலதிபர்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதனால், மருத்துவமனைகள் நிரம்பி வழிவதனால், புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஒருவர் தனி விமானம் மூலம் சென்னைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயர் வெளியிடப்படாதா அந்த தொழிலதிபர் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.
குறித்த தொழிலதிபருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் இடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த தொழிலதிபர் கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை அணுகிய நிலையில் அந்த மருத்துவமனை தொழிலதிபருக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தது.
இதையடுத்து, கொரோனா பாதிக்கப்பட்ட தொழிலதிபர் நேற்று முந்தினம் தனி விமானம் மூலம் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு வந்துள்ளார்.
விமான நிலையத்தில் தரையிரங்கியஅவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குறித்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.